திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் முனியசாமி(32). இவர் நேற்று காலை திருச்சுழி நீதிமன்ற வாயிலில் உள்ள மரத்தடியில் தனது கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது.
இதில் மின்னல் தாக்கி முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் நின்றிருந்த மஞ்சம்பட்டியை சேர்ந்த பிச்சை(40), சேகர்(25) ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
The post நீதிமன்ற வாயிலில் மின்னல் தாக்கி வழக்கறிஞர் சாவு appeared first on Dinakaran.
