வந்தவாசியில் விபத்து ஏற்படும் அபாயம் குடிநீர் மெயின்லைன் பைப் வால்வை மாற்றியமைக்க கோரிக்கை

வந்தவாசி : வந்தவாசி டவுன் நெமந்தகார தெருவில் குடிநீர் மெயின்லைன் பைப் வால்வை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வந்தவாசி நகராட்சி 6வது வார்டில் உள்ள நெமந்தகார தெருவில் குடிநீர் மெயின்லைன் பைப் வால்வு சாலையின் மையப் பகுதியில் உள்ளது.

ஏற்கனவே சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அங்கு வால்வு இருந்த பகுதியில் எந்த ஒரு தடையும் இல்லாமல் இருந்தது. தற்போது புதிதாக சிமெண்ட் சாலை கடந்த மாதம் அமைக்கப்பட்டது. எனவே, வால்வை திருப்பி மூடுவதற்காக அங்கு சிமெண்ட் பைப் சாலையை விட ஒரு அடி உயரத்துக்கு நகராட்சி நிர்வாகத்தால் நடப்பட்டுள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிறுவர்களும் தடுக்கி விழும் நிலையில் உள்ளது. மேலும், கார் உள்ளிட்ட கனரக வாகனம் எதிர் எதிரே செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே, அப்பகுதியில் சிலாப் மேல் மூடி அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post வந்தவாசியில் விபத்து ஏற்படும் அபாயம் குடிநீர் மெயின்லைன் பைப் வால்வை மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: