ஈரோட்டில் எஸ்ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

ஈரோடு, ஏப். 24: ஈரோட்டில் எஸ்ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது. ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் அனைத்து அரசு துறை போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நேரடி போலீஸ் எஸ்ஐ (உதவி ஆய்வாளர்) பணிக்கான போட்டி தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ராதிகா தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார். எஸ்ஐ போட்டி தேர்வு மூலம் தேர்வான எஸ்ஐ மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், 25 பேர் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மேலும், விஏஓ பணிக்கான தேர்வுக்காக பயிற்சி பெறும் 140 பேர், நேற்று நடத்தப்பட்ட மாதிரி தேர்வையும் எழுதினர்.

The post ஈரோட்டில் எஸ்ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: