ஈரோடு, ஏப். 23: ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்தியூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில், அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஜெகதீசன் (44), பூபதி (44), வெங்கடேஷ் (55), என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, சீட்டுக் கட்டுகள், சூதாட்ட பணம் ரூ.2,130 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
The post சூதாட்டம்: 3 பேர் கைது appeared first on Dinakaran.