திண்டிவனம், ஏப். 22: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியனூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபாலன் மனைவி மல்லிகா (60). இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மேல்மலையனூரில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் கிடந்துள்ளது. உடனடியாக அவர் உள்ளே சென்று அறையினுள் பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததுடன், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3.5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மல்லிகா, வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தி, மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3.5 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் திருட்டு appeared first on Dinakaran.