பொள்ளாச்சி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கிய கடைக்கு சீல்

*அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் அருகே உள்ள தேவநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த மளிகைக்கடையில் சோதனை நடத்தினர். கடையில் உள்ள ஒரு பகுதியில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில், அடுக்கடுக்காக புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மொத்தம் 16 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்த மளிகைக்கடையில், தண்டனை பெற்ற கடை என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், இது தொடர்பாக கோமங்கலம் போலீசார் மளிகைக்கடை உரிமையாளர் பட்டுராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொள்ளாச்சி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கிய கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: