திருச்சியில் இளம்பெண் மாயம்

திருச்சி, ஏப்.18: திருச்சியில் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி, உறையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (46). இவரது மனைவி மாலா (36), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த ஏப்.9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாலா மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாலாவை தேடி வருகின்றனர்.

The post திருச்சியில் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: