கிருஷ்ணகிரி, ஏப்.17: கிருஷ்ணகிரி தாலுகா எஸ்ஐ திருப்பதி மற்றும் போலீசார் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது, அதில் ₹5 ஆயிரம் மதிப்பிலான நான்கு கிலோ குட்கா பொருட்களை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. தொடர் விசாரணையில், அவர்கள் திருவள்ளுவர் மாவட்டம், நந்தவனகோட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ்(46), ஆவடி காந்தி நகரை சேர்ந்த சஞ்சய் குமார்(49) என்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெங்களூரூவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.
