கிருஷ்ணகிரி, ஏப்.17: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, குருபரப்பள்ளி தனியார் நர்சிங் கல்லூரி அருகே கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். அதில், 2 யூனிட் கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குருபரப்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த லாரியின் உரிமையாளரான கிருஷ்ணகிரி மலைச்சந்து கிராமத்தை சேர்ந்த சக்தி(35) மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.
The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.
