அழுகிய நிலையில் நீலகிரி காங்கிரஸ் நிர்வாகி சடலம் மீட்பு

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல் கொட்டரகண்டி பகுதியில் தனியாக வசித்தவர் ராஜ்குமார். முன்னாள் ராணுவ வீரரான இவர், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்து வந்தார். நேற்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து மஞ்சூர் போலீசார் சென்று வீட்டை திறந்து பார்த்தபோது உள்ளே ராஜ்குமார் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. மாவட்ட போலீஸ் எஸ்பி நிஷா நேரில் சென்று விசாரித்தார்.

ராஜ்குமார் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கக்கூடும் என்றும், சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற வகையில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மஞ்சூர், கொட்டரகண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அழுகிய நிலையில் நீலகிரி காங்கிரஸ் நிர்வாகி சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: