அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் ஒப்புதல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி 2016 முதல் 2021 வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகாரின்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி 2022 ஜனவரி 5ல் கைது செய்யப்பட்டார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: