அமெரிக்காவில் விமான விபத்து இந்திய பெண் மருத்துவர் குடும்பத்தினருடன் பலி: பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் சோகம்

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் தனது குடும்பத்தினருடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மகளிருக்கான சிறுநீரக மருத்துவ நிபுணர் ஜாய் சைனி. இவரது கணவர் நரம்பியல் நிபுணர் மைக்கேல் கிராப். பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஜாய் சைனி, தனது பெற்றோருடன் சிறு வயதிலேயே அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். பிட்ஸ்பர்க் பல்லைக்கழக மருத்துவப் பள்ளியில் மருத்துவ பட்டம் பெற்ற சைனி பாஸ்டனில் பாஸ்டன் பெல்விக் ஹெல்த் மற்றும் வெல்னஸ் மையத்தை நிறுவியவர்.

இந்நிலையில் ஜாய் சைனி தனது கணவர், மகள், மகன் மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நியூயார்க்கின் கேட்ஸ்கில்ஸ் மலைப்பகுதிக்கு தனி விமானத்தில் சென்றார். விமானத்தை மைக்கேல் கிராப் ஓட்டினார். கடந்த 12ம் தேதி கொலம்பியா கவுன்டி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் 16 கிமீ தொலைவுக்கு முன்பாக கோபகே பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த ஜாய் சைனி உட்பட 6 பேரும் பலியாகினர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்லாததால் சைனியின் மற்றொரு மகள் அனிகா தப்பி உள்ளார்.

The post அமெரிக்காவில் விமான விபத்து இந்திய பெண் மருத்துவர் குடும்பத்தினருடன் பலி: பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: