இதனால், அவரை காவல் நியைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, நெசப்பாக்கத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ஷேக் நூருதீன் (27) என்றும், இவர் துபாயில் உள்ள இப்ராமிக் என்பவர் கூறியபடி, மண்ணடி ஈவினிங் பஜாரில் உள்ள ஒரு கடையில் ‘ரகசிய எண்கள்’ கூறி ரூ.10 கொடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் இருந்து பணத்தை பெற்று வந்ததும், அந்த பணத்தை துபாயில் உள்ள இப்ராகிம் கூறும் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வதற்காக, அண்ணாசாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த ரூ.7 லட்சம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக பிடிபட்ட ஷேக் நூருதீனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post திருவல்லிக்கேணியில் நடந்த வாகன சோதனையின்போது வாலிபரிடம் ரூ.7 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.