5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்பதால் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டது.

ஒரு சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மாவட்டத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும், கடலூர், திருவள்ளூர், மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வேலூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

கடந்த இரண்டு நாட்களாக வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் 102 டிகிரி வரையும் வெயில் கொளுத்தியது. நேற்றைய நிலவரப்படி திருத்தணி, மதுரை, காரைக்கால், பகுதிகளில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூர், திருச்சி, ஈரோடு 100 டிகிரி, தஞ்சாவூர் 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மேலும் 15ம் தேதி வரையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்பதால் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படும்.

The post 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: