விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம், ரங்கத்தை சேர்ந்த சரண்ராஜ் (31) எனத் தெரியவந்தது. மேலும், இவர் ஒடிசாவில் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கிக் கொண்டு, சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த கஞ்சாவுடன் திருச்சிக்கு சென்று, அவற்றை அதிக விலைக்கு சில்லறை விற்பனையில் ஈடுபட சரண்ராஜ் திட்டமிட்டு இருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.