திருச்சி, ஏப். 12: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி வயலூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திர தினத்தன்று முருகனை வழிபட்டால் நம் வாழ்வில் சகல பாக்கியங்களும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்போம் என்பது நம்பிக்கை. இந்தாண்டு நேற்று பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி, வயலூர்முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வயலூர் சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். ஏராளமான மக்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை முருகபெருமானுக்கு செலுத்தினர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று வயலூர் முருகனுக்கு நேற்று சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு ஆரோகரா என்ற பக்தி கோஷத்தை எழுப்பி பக்தி பரவசமடைந்தனர். இதேபோல் திருச்சி ரயில்வே ஜங்சன் அருகே உள்ள மினவும் பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு வழிவிடு முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
The post வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.