மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்படும் வகையில் பேச மாட்டேன்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை: இயற்கையிலேயே உடலில் குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அழைத்து வந்ததை கலைஞர் கருணை உள்ளத்தோடு ‘‘மாற்றுத் திறனாளிகள்” என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று திமுக தலைவர் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படி செய்தது மிகப் பெரிய தவறாகும்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கிறேன். தலைவர் எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.

The post மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்படும் வகையில் பேச மாட்டேன்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: