மாநகராட்சி பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு பணி

 

ஈரோடு, ஏப்.11: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஒண்டிக்காரன் பாளையத்தில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் குழாய் உடைந்ததை அடுத்து, அதனை மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர். ஈரோடு மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிக்காரன் பாளையத்தில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், ஒண்டிக்காரன் பாளையத்தில் கடந்த 2 நாட்களாக ஊராட்சிக்கோட்டை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக சாலையில் சென்றது. இதன் காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். இதனையடுத்து, குடிநீர் குழாய் உடைப்பு தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்தனர்.

The post மாநகராட்சி பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Related Stories: