கனிம வளம் கடத்திய கனரக லாரி பறிமுதல்

 

பல்லாவரம், ஏப்.11: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட புவியியல் அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, அந்த வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. அதனை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், லாரியை சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி கனிம வளம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, லாரி மற்றும் டிரைவரை, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர் 4வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (32) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கனிம வளம் கடத்திய கனரக லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: