அதன்படி அனைத்து தேர்வுகளும் முடிந்ததும் 17ம் தேதி சேகரிப்பு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் மண்டலங்களுக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் விடைத்தாள்களை கலக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 21ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. அன்றைய தினம் முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் சுய மதிப்பீட்டு பணி மேற்கொள்வார்கள். தொடர்ந்து 22ம் தேதி முதல் அனைத்து உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்வார்கள். இப்பணியை 30ம் தேதிக்குள் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குனர்(பணியாளர்) மகேஸ்வரி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அவ்வெண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரியாகக் கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாட்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்ற வேண்டும். தங்கள் மாவட்டத்தில் அமையும் மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்றுமொழி வாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும்.
மதிப்பீட்டுப் பணி குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதமில்லாமலும் நடைபெற வேண்டும். மேற்படி மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் 10ம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப் பட்டியலை தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும். மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள் அமைக்கப்பெற்றிருப்பின் இரு முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு வரும் 18ம் தேதிக்குள் நியமன ஆணையினை தவறாமல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மதிப்பீட்டுப் பணி குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதமில்லாமலும் நடைபெற வேண்டும்.
அரசு பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் 10ம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
The post 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி தொடக்கம்; தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் மட்டுமே தமிழ்வழி விடைத்தாள்களை திருத்த வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு appeared first on Dinakaran.
