சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

கோயில் திருவிழாக்களின்போது குறிப்பிட்ட சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. இந்து ஆலய பாதுகாப்புக்குழுவை சேர்ந்த ஆறுமுக நயினார், ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அறநிலைய ஆணையரின் சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை; ஆணையர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை! appeared first on Dinakaran.

Related Stories: