நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்

சென்னை: நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. பாமக ஜி.கே.மணி, சிபிஎம் நாகை மாலி, காங்கிரஸ் ராஜேஷ்குமார், மதிமுக சதன் திருமலைக்குமார், விசிக சிந்தனைச் செல்வன் ஆகியோர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நீட் தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்க்கிறது; நுழைவுத் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கக் கூடியது. நீட் விவகாரத்தில் அரசின் வேலையை செய்யாமல் அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஆளுநர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: