ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

 

புழல், ஏப்.9: புழல் கண்ணப்பசாமி நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் விக்ரமன் (35). அம்பத்தூரில் தனியார் ஹெல்த் மையத்தில் பணிபுரிந்துகொண்டு, கார் டிரைவராகவும் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்து சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த விக்ரமனின் அண்ணன் சதீஷ்ராஜ் (36), இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மாயமான விக்ரமனை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புழல் ஏரி ஜோன்ஸ் டவர் அருகே தண்ணீரில் சடலம் மிதப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், ஏரியில் மிதந்து கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது கடந்த 6ம் தேதி மாயமான விக்ரமன் என்பது தெரியவந்தது. திருமணமாகாத ஏக்கத்தில் ஏரியில் விழுந்து விக்ரமன் தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்துக்கொன்றுவிட்டு உடலை ஏரியில் வீசிச்சென்றனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: