எர்ணாவூர் ரயில்வே மேம்பாலம் பழுது: அச்சத்தில் மக்கள்


திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், எண்ணூர் விரைவு சாலையில் இருந்து எர்ணாவூர் ரயில்வே மேம்பாலத்தை கடந்து மணலி நெடுஞ்சாலை வழியாக மணலி, மாதவரம் மற்றும் மணலி புதுநகர் ஆகிய பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எர்ணாவூர் ரயில்வே மேம்பாலத்தின் இரண்டு புறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடப்பதுடன் அதன் வேர்கள் மேம்பாலத்தின் உட் பகுதியில் ஊடுருவி பாலத்தின் உறுதித்தன்மை வலுவிழந்துள்ளது. இதன்காரணமாக மேம்பாலத்தில் பயணிக்க வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மேலும் தண்டவாளத்தின் மேலே மேம்பாலத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்கள், காங்கிரீட் தளங்கள் உடைந்தும் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்துள்ளது.

இதனால் சென்னை துறைமுகத்தில் இருந்து அதிக சுமைகளை ஏற்றிவரும் கன்டெய்னர் லாரிகள், பாலத்தை கடக்கும் பயங்கர அதிர்வுகள் ஏற்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள எர்ணாவூர் ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘’கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எர்ணாவூர் ரயில்வே மேம்பாலம் சரியான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்துள்ளது. எனவே, பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.

The post எர்ணாவூர் ரயில்வே மேம்பாலம் பழுது: அச்சத்தில் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: