திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

 

திருவள்ளூர், ஏப்.5: திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளில் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் திருமழிசை மற்றும் ஆரணி பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோடை காலம் என்பதால் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும், என்று அரசுத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் எஸ்.ஜெயக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ம.வெங்கடேஷ்(திருமழிசை), அபூபக்கர்(ஆரணி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: