முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கிறது ஏப்.16ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஏப்.4: தமிழக அரசின் நிறுவனமான டான்செம் மற்றும் டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான இமயம் பொறியியல் கல்லூரி இணைந்து ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்காக வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் வௌியிடடுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளை கண்டறிந்து, அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து, அவர்களை பணியில் அமர்ந்து செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாமை வரும் ஏப்.16ம் தேதி நடத்த உள்ளது. காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடைந்த இளைஞர்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும்.

திருச்சியில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். வேலைவாய்ப்பு முகாமானது திருச்சி மாவட்டம துறையூர் நாமக்கல் சாலையில் உள்ள இமயம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து நேர்காணல் நடத்தவிருக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மின்னஞ்சல் வாயிலான gcc.tansam@gmail.com என்ற முகவரியிலும், தொடா்பு எண்கள் : +91 8695881001, +91 9566359960, +91 8681878889, +91 9514838485 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

The post முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கிறது ஏப்.16ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: