சங்ககிரி அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது

சங்ககிரி. ஏப்.4: சங்ககிரி தாலுகா, அரசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12ம் வகுப்பு படித்துவிட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி நள்ளிரவில், பெற்றோர் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. அதனையடுத்து உறவினர்களிடத்திலும், அக்கம் பக்கத்திலும், எங்கும் தேடியும் கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், அரூர் ஊத்தங்கரை புதுக்காட்டைச் சேர்ந்த கந்தசாமி மகன் அய்யனார் (19) என்பவர், தங்களது மகளை கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி, எஸ்ஐ மல்லிகா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி கண்டுபிடித்து மீட்டனர். மேலும், அய்யனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்ககிரி அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: