கும்மிடிப்பூண்டி, ஏப். 3: சென்ட்ரல்- கூடூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19 மின்சார ரயில்கள் இன்று மற்றும் 5ம் தேதிகளில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை மார்க்கத்தில் காலை 5.40, 10.15, 12.10 இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், அதேபோன்று மறுமார்க்கமாக மதியம் 1.15, 3.10 இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை- நெல்லூர் இடையே காலை 8.10 மணிக்கும், மறுமார்க்கமாக நெல்லூர்- சூலூர்பேட்டை இடையே காலை 10.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோன்று மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30, 11.35 மதியம் 1.40 மணிக்கும், மறுமார்க்கமாக மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே மாலை 4.25 மணிக்கும், சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.40, 2.40 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி- தாம்பரம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து ரத்து ெசய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post சென்ட்ரல்- கூடூர் இடையேபராமரிப்பு பணி காரணமாக 19 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.