வேலூர், ஏப்.3:காட்பாடி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி பள்ளிகுப்பம் ரயில்வே கேட் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 யூனிட் மணல் இருந்தது. இது குறித்து லாரி டிரைவர ஆந்திராவை சேர்ந்த ஞானி (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 யூனிட் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post 10 யூனிட் மணல் கடத்திய டிரைவர் கைது:ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு appeared first on Dinakaran.