பங்குனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று பங்குனி அமாவாசை என்பதால் விருதுநகர், மதுரை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

The post பங்குனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: