ஏற்காடு, மார்ச் 30: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், ஏற்காட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டிபாடி வேலூர் அருகே, வனப்பகுதியில் நேற்று இரவு அடர்ந்த வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பிடித்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ வேறு இடத்திற்கு பரவாமல் தடுக்க, தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீயால் வனப்பகுதியில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
The post ஏற்காடு வனப்பகுதியில் தீ appeared first on Dinakaran.