திருநள்ளாறு கோயிலை பொருத்தவரை வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றியே சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி அடுத்த ஆண்டு (2026) சனிப்பெயர்ச்சி நடைபெறும். இதனால் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை. இன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெற்றது. இருப்பினும் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சனிப்பெயர்ச்சி தொடங்கியதில் இருந்து 90 நாட்களுக்குள் திருநள்ளாறு சென்று வழிபடுவது ஏராளமான நன்மைகளைத் தரும் என்பதாலும், சனிக்கிழமை மட்டுமின்றி சூரிய கிரகணம், சனி அமாவாசை என்பதாலும் திருநள்ளாறில் வழக்கத்தைவிட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
குச்சனூர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோயில் உள்ளது. திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற இந்த சனிபகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படி வருகின்ற 2026 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
The post சூரிய கிரகணம், சனி அமாவாசை: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.