பெரம்பலூர், மார்ச் 29: உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நகராட்சியில் உள்ள கொடிக்கம்பங்களை 2- வாரங்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார். இது குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் வைத்துள்ள கொடிக் கம்பங்களை உயர்நீதி மன்றம் அளித்தத் தீர்ப்பினைஏற்று, தாங்களே முன்வந்து இரண்டு வாரங்களுக்குள் அகற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறு அகற்றாவிட்டால் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை நகராட்சி பணியாளர்களை கொண்டு அகற்றம் செய்யப்பட்டு அதற்கு உண்டான செலவுத் தொகையும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post உயர்நீதிமன்ற ஆணையின்படி பொது இடங்களில் கொடிக்கம்பங்களை 2 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.