தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.840 எகிறியது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.840 அதிகரித்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.  தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை தங்கம் விலை குறைந்து நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த புதன் கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.80, நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. இந்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

அதாவது, கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,340க்கும், பவுனுக்கு ரூ.840 ரூபாய் உயர்ந்து ஒரு ஒரு பவுன் ரூ.66,720க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற உச்சத்தை தொட்டது. இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.114க்கும், கிலோவுக்கு ரூ.3000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,14,000க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.840 எகிறியது appeared first on Dinakaran.

Related Stories: