நகை பிரியர்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடியா உயர்ந்த தங்கத்தின் விலை: எவ்ளோ தெரியுமா..?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,340-க்கும், சவரன் ரூ.66,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

அந்தவகையில், நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,235க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,340-க்கும், சவரன் ரூ.66,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.66,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ. 114க்கு விற்பனையாகிறது.

 

The post நகை பிரியர்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடியா உயர்ந்த தங்கத்தின் விலை: எவ்ளோ தெரியுமா..? appeared first on Dinakaran.

Related Stories: