பெண் வக்கீல் வீட்டில் 6 சவரன், பணம் திருட்டு வேலூர் அருகே துணிகரம்

வேலூர், மார்ச் 29: ேவலூர் அருகே பெண் வக்கீல் வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் நகை, பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். வேலூர் அடுத்த சாத்துமதுரை துர்கா நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (34). இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணிக்கடையில் வேலை செய்கிறார். இவரது மனைவி வழக்கறிஞராக உள்ளார். தம்பதி இருவரும் 26ம் தேதி காலை வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவர்களது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த சுமார் 6 சவரன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். மாலை வீடு திரும்பிய தம்பதி, வீட்டில் திருட்டு நடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக வேலூர் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் எஸ்ஐ சுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

The post பெண் வக்கீல் வீட்டில் 6 சவரன், பணம் திருட்டு வேலூர் அருகே துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: