திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த கல்வியாண்டு முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயது 5ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறினார். கேரள பொது கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியது: கேரளாவில் தற்போது ஒன்றாம் வகுப்பில் சேர வயது 5ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் 6 வயதில் தான் முறையான கல்விக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராவார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் தான் கல்வியில் முன்னேறிய பல நாடுகள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக நிர்ணயம் செய்துள்ளது. எனவே கேரளாவிலும் இந்த முறையை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் கேரளாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயது 5ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கேரளாவில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் வயது 6 ஆக அதிகரிப்பு: கல்வி அமைச்சர் சிவன்குட்டி அறிவிப்பு appeared first on Dinakaran.