அப்போது, கண்ணகி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு இருவருக்கும் சண்டை ஏற்பட்டதில் கண்ணகியை அற்புதராஜ் தாக்கினார். இதில் மயங்கி கீழே விழுந்த கண்ணகியை, தலையணை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்கு செய்து அற்புதராஜை கைது செய்தனர். இந்த வழக்கை தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சிவஞானம் விசாரித்து மதபோதகர் அற்புதராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
The post பெண் கொலை வழக்கில் மதபோதகருக்கு ஆயுள்: தர்மபுரி மகளிர் விரைவு கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.