இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தர்கா எனும் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின்பேரில் போலீசார் நிறுத்தினர்.
லாரியை நிறுத்தியதும் 3 பேர் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். போலீசார் சுதாரித்துக்கொண்டு, 2 பேரை மடக்கிப்பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். தொடர்ந்து லாரியை சோதனையிட்டனர். அதில் தர்பூசணி பழங்களுக்கு அடியில் 215 கேன்களில் எரிசாராயம் பதுக்கி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து, தமிழகம் வழியாக கேரள மாநிலத்திற்கு 215 கேன்களில் 7,525 லிட்டர் எரிசாராயத்தை கடத்திச் செல்வதாக தெரிவித்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த டிரைவர் சஜித், மாற்று டிரைவர் பாபுராஜ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், எரிசாராயம் கடத்த பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய கேரளாவை சேர்ந்த அனீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post லாரியை நிறுத்தி போலீசார் சோதனை; தர்பூசணி பழங்களுக்கு அடியில் பதுக்கிய 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.