100 நாள் வேலை திட்டத்துக்கான தமிழ்நாட்டுக்குரிய நிதி ரூ.4,034 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 100 நாள் வேலை திட்டத்துக்கான தமிழ்நாட்டுக்குரிய நிதி ரூ.4,034 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்புக்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு ஊதியத்தை தர மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு; திறமையாக திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி மக்களை வஞ்சிக்கும் போக்கை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 இடங்களில் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநில உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் கிராமப்புற ஆண், பெண் தொழிலாளர்களை பங்கேற்கச் செய்திட வேண்டும். தொழிலாளர்களின் உரிமை முழக்கமாக திமுகவினர் களம் காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post 100 நாள் வேலை திட்டத்துக்கான தமிழ்நாட்டுக்குரிய நிதி ரூ.4,034 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: