நெல் அறுவடை பணி தீவிரம் வயலில் கம்பி வேலியை திருட முயற்சித்தவர் கைது

ஜெயங்கொண்டம், மார்ச் 27: கரடிகுளம் கிராமம் வளம்பட்டி தெருவை சேர்ந்த பார்த்திபன் (42). இவர் தனது வயலில் கம்பி வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒருவர் கம்பி வேலியை திருட முயற்சித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரை கம்பி வேலியுடன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரித்த போது, அவர் கழுவதோண்டி கிராமம் மேல தெருவை சேர்ந்த அப்பு (எ) ராஜேஷ் என்பதும் குடிபோதையில் கம்பி வேலியை திருட முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 

The post நெல் அறுவடை பணி தீவிரம் வயலில் கம்பி வேலியை திருட முயற்சித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: