சேலத்தில் வியாபாரியிடமிருந்து 30 கிலோ வெள்ளி வாங்கி ஏமாற்றிய 2 பேர் கைது

சேலம், மார்ச் 27: சேலம் கோட்டை ஜலால்கான் தெருவை சேர்ந்தவர் சையத் இக்பால்(62). வெள்ளி தொழில் செய்து வருகிறார். பியூர் வெள்ளியை வாங்கி, கொலுசாக மாற்றி விற்பனை செய்கிறார். இவரிடம் கோட்டையை சேர்ந்த முகமது வசிம்(26), செவ்வாய்பேட்டையை சேர்ந்த அவரது சித்தப்பா சிவா(40) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். சையத் இக்பாலிடம், 50கிலோ பியூர் வெள்ளியை வாங்கி, அதனை கொலுசாக மாற்றி விற்பனை செய்து தருவதாக கூறினர்.

ஆனால் அவர்கள் கூறியதுபோல வெள்ளியை விற்பனை செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். பின்னர் 20 கிலோ கொலுசுகளை கொடுத்த நிலையில், 30 கிலோ வெள்ளியை கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் டவுன் குற்றப்பிரிவில் சையத் இக்பால் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது வசிம், சிவா ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சேலத்தில் வியாபாரியிடமிருந்து 30 கிலோ வெள்ளி வாங்கி ஏமாற்றிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: