*பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி அலுவலக கட்டிடங்கள் ரூ.157 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.
*ஊரகப் பகுதிகளில் உள்ள 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
*500 முழுநேர நியாய விலைக்கடைகள் ரூ.61 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
*1 கோடி மரக்கன்றுகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு நிலங்கள், நிறுவனங்கள் மற்றும் சாலையோரங்களில் நடப்படும்.
*ஊரகப் பகுதிகளில் 500 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, சுற்றுசுவர் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
*ஊரகப்பகுதிகளில் புதிய குளங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சமுதாய நிலங்களை சமன்படுத்தி மேம்படுத்துதல் போன்ற பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
*குக்கிராமங்களை இணைக்கும் விதமாக ஊரகப்பகுதிகளில் உள்ள மண் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
*ஊரகப் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல் பணிகள் ரூ.350 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
*2025-26ம் ஆண்டில், ஊரகப் பகுதிகளில் புதிதாக குழந்தை நேய வகுப்பறைகள் ரூ.182 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
*2025-26ம் ஆண்டிலும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
*கிராம சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.
*ஊரக வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தடையற்ற குடிநீர் விநியோகிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1,200 புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.
*தமிழ்நாட்டில் நகர்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு குடிநீர், சுகாதாரம், சாலை பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.10 லட்சம் வீதம் ரூ.69 கோடி மானியமாக வழங்கப்படும்.
*தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் உள்ள 278 மலைக்கிராம ஊராட்சிகளுக்கு, குடிநீர், சுகாதாரம், சாலை பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.30 கோடி மானியமாக வழங்கப்படும்.
*வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.10 கோடி மானியமாக வழங்கப்படும்.
*துப்புரவு தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும்.
*ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பழைய, பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக் கட்டிடங்கள் தலா ரூ.5.90 கோடி வீதம் மொத்தம் ரூ.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
*நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2025-26ம் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.150 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
*ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பள்ளிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக் கட்டடங்களை புனரமைத்து, முறையாக பராமரிப்பதற்காக, விரிவான பராமரிப்புக் கொள்கை வகுக்கப்படும். 2025-26ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதற்கென ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட 1500 சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.31.50 மதிப்பீட்டில் கட்டப்படும் உள்ளிட்ட 20 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
The post ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடியில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்: 20 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ஐ.பெரியசாமி appeared first on Dinakaran.