ஓட்டல் அறையில் சரமாரி தாக்கினர் பாலிவுட் நடிகை கை, கால்களை கட்டி நகை, பணம் கொள்ளை: ஐதராபாத் போலீசார் விசாரணை

திருமலை: ஐதராபாத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு தலைமை விருந்தினராக பாலிவுட் நடிகை ஒருவர் வந்தார். ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் மசாப் டேங்கில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் அறை வாடகைக்கு எடுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்து கதவை தட்டிய 2 பெண்கள் மற்றும் 2 இளைஞர்கள், அறைக்குள் புகுந்து பாலிவுட் நடிகையை சரமாரி தாக்கி உள்ளனர்.

மேலும் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு, வாயையும் துணியால் கட்டி அவரது பையில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கும் போலீசார் நடிகையின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.

The post ஓட்டல் அறையில் சரமாரி தாக்கினர் பாலிவுட் நடிகை கை, கால்களை கட்டி நகை, பணம் கொள்ளை: ஐதராபாத் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: