சென்னை: தமிழகம் முழுவதும் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த அவினவ் குமார் மதுரை சரக டிஐஜியாகவும், திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த மூர்த்தி ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக இருந்த சந்தோஷ் ஹதிமானி கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி சரக டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்த சக்திவேல் சென்னை பெருநகர நுண்ணறிவுப்பிரிவு-1 துணை கமிஷனராகவும், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த பாஸ்கரன் சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராகவும், சென்னை பெருநகர காவல் நலன் மற்றும் எஸ்டேட் துணை கமிஷனராக இருந்த மெகலினா ஐடன் சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்த ஹரி கிரண் பிரசாத் சென்னை பெருநகர காவலர் நலன் மற்றும் எஸ்டேட் துணை கமிஷனராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் 14 கமாண்டன்டாக இருந்த கார்த்திக் சென்னை பெருநகர மயிலாப்பூர் துணை கமிஷனராகவும், ஈரோடு மாவட்ட எஸ்பியாக இருந்த ஜவஹர் வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்பியாகவும், திருப்பூர் நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த சுஜாதா ஈரோடு மாவட்ட எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு appeared first on Dinakaran.