கருங்கல் விழுந்து உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது வாய்க்கால் நடுவிலிருந்த பாறையை நேற்று முன்தினம் வெடிவைத்து தகர்த்த போது சிதறிய கருங்கல் அருகிலிருந்த விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முத்துலட்சுமி என்பவரின் மகள் காயத்திரி (10) தலையின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சிறுமி காயத்திரியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கருங்கல் விழுந்து உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: