இலாடபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

பெரம்பலூர், மார்ச் 23: இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டம், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியின் சார்பில் 2025 -2026ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று (22ம்தேதி) நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ஆசிரியர்கள் செல்வராணி, சின்னசாமி, பாலச்சந்திரன், அருணா, பள்ளி மேலாண்மைக் குழு வின்தலைவர் இந்திராணி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகக் தலைவர் மற்றும் மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியின் சிறப்புகளை, தமிழ்நாடு அரசு பள்ளிக ளுக்கும் மாணவ மாணவி யருக்கும் வழங்கிவரும் விலை இல்லா நோட்டுப் புத்தகங்கள், சீருடை, மிதிவண்டி, புத்தகப்பை, காலணிகள், கணித உபகரணப்பெட்டி, காலை உணவு, மதிய உணவு, பஸ் பாஸ் மற்றும் செயல் படுத்தி வரும் சிறப்புத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப் பட்டன.

இந்தப் பேரணியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த, சாரண, சாரணியர் அமைப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய சீருடையில் கலந்து கொண்டனர். பேரணி அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் தொடங்கி 5, 6, 7 வது வார்டுகளின் தெருக்களின் வழியே சென்று, இலாடபுரம் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

The post இலாடபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: