ஐடி சட்டப்பிரிவு 79(3)(பி) பிரிவின் கீழ் ஆன்லைன் பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிடுவதன் மூலம், எழுத்துப்பூர்வ விளக்கம் கொடுப்பது, உரிய விசாரணை நடத்துவது என பல்வேறு நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்களை சென்சார் செய்வதற்கான கருவியாக சஹ்யோக் போர்ட்டல் என்ற ஒன்றிய அரசு உருவாக்கிய போர்ட்டல் திகழ்கிறது. அதில், எக்ஸ் நிறுவனம் உறுப்பினராகவில்லை. சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், உரிய ஆய்வு செய்யாமல் சில பதிவுகளை நீக்குமாறு உத்தரவிட்டு அழுத்தம் கொடுப்பதால் தான் அந்த போர்ட்டலில் இணையவில்லை. நீதித்துறையின் மேற்பார்வை இல்லாமல் ஆன்லைன் பதிவுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் மற்றொரு முயற்சி இது இவ்வாறு எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு ஒன்றிய அரசுக்கு எதிராக எக்ஸ் நிறுவனம் வழக்கு appeared first on Dinakaran.