மேலும், இக்குளத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீர் மாசடைந்து நிலத்தடி நீர்மட்டம் பயன்பாட்டிற்கு லாயக்கையற்ற வகையில் மாறும் அபாயம் நிலவுகிறது. இவ்வாறு, மாசடைந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் பார்வைக்கு, கிராம மக்கள் சார்பில் பலமுறை கொண்டு சென்றும் மெத்தனமாக செயல்படுவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டினர். தற்போது, கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், குடிநீர் வறட்சியை போக்க தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெரிய நாகபூண்டி குளத்தை தூர்வாரி சீரமைத்து, குளத்தை சுற்றி இரும்பு வேலி அமைத்து, கிராம மக்கள் நடை பயிற்சிக்கு வசதியாக விளக்குகள், ஓய்வு எடுக்க இருக்கைகள் அமைத்து தர முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post புதர்மண்டி காணப்படும் பெரிய நாகபூண்டி குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
