திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா நிறைவு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா சிறப்பாக நடத்த சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா கடந்த 16ம் தேதி தொடங்கி, மாலை காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. இரவு காரைக்கால் அம்மையார் சிறப்பு மலர் அலங்காரத்தில் புஷ்பநாக ஊஞ்சலும் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காரைக்கால் அம்மையாரை தரிசித்தனர். விழாவில் 2ம் நாளான நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார். திருக்கோயில் முழுவதும் மங்கள இசை வாத்தியமும், கயிலை வாத்தியம் முழக்கம் ஒலித்தது. பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 2 நாள் நடைபெற்ற இந்த விழா நேற்று முன்தினமுடன் நிறைவு பெற்றது. திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி மேற்பார்வையில் அருளாளர் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

The post திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: